அடுத்த தேர்தல் வரை பிரதமர் அசையமாட்டார்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகமாட்டார் என்றும், அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பார் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!