பதவி விலகும் வரை போராட்டத்தை தொடருங்கள்!

ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகும் வரையில் நாட்டு மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை தொடர்ச்சியாக கொண்டு செல்ல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபையில் வலியுறுத்தினார்.
    
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், அரசாங்கம் கூறுவதைப்பார்த்தல் ஜனாதிபதி பதவி விலகப்போவதும் இல்லை, அரசாங்கம் பதவி விலகப்போவதும் இல்லை.ஆகவே இப்போது மக்களிடம் நாம் ஒன்றினை கேட்டுக்கொள்கின்றேன், இவர்கள் பதவி விலகும் வரையில் பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லுங்கள்.

ஏனெனில் இந்த பாராளுமன்றம் மக்களின் குரலுக்கு செவிமடுக்க தயாராக இல்லை. மக்களின் குரலுக்கு செவிமடுக்கவில்லை என்றால் இந்த நாட்டை மேலும் மேலும் பாதாளத்திற்கு இழுத்து செல்லும் இந்த அரசாங்கத்தில் உள்ள சகலரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!