இலங்கை கடற்படை கைது செய்த 16 மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைதான ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த வாரம் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்கள் அங்குள்ள ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைதான மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணையின் போது 16 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இனிமேல் மீண்டும் பிடிபட்டால் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் தற்போது விடுதலை செய்வதாக நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!