ராஜபக்ச குடும்பம் 10 பில்லியன் டொலர் முதலீடா?- உகண்டா நிறுவனம் அறிக்கை.

உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் இலங்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழும நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் 10 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்,குறித்த நிறுவனம் இந்த கோரிக்கையை மறுத்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!