ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாமைக்கு இதுவே காரணம்! ஐ.தே.கவின் முக்கியஸ்தர் April 19, 2022 8:07 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஊழல் மோசடிகளை மூடிமறைக்கும் நோக்கில் ராஜபக்சர்கள் ஆட்சியில் தொடர முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலளார் பாலித ரங்கே பண்டார இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,புதிதாக அமைச்சரவையை நியமித்ததன் மூலம் பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. அனைத்து ராஜபக்சர்களையும் பதவி விலகுமாறு கோரப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகாதிருப்பது, தாம் செய்த ஊழல் மோசடிகளை மறைக்கவே.புதிய அமைச்சரவையை நியமிப்பதன் மூலம் எந்தவொரு மக்கள் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது. இந்த நாட்டின் சொத்துக்களை கொள்ளையிட்ட ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதனை மக்கள் விரும்பவில்லை.புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அநேகமான நபர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவ்வாறனவர்களுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பினை ஒப்படைப்பது நியாயமாகுமா.மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…