அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அரசாங்கத்துக்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று விசேட உரையை ஆற்றிய பைசல் காசிம், தாமும், எம்.எஸ். தௌபீக் மற்றும் இசாக் ரஹ்மான் ஆகிய மூவரும் அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்தார்

நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு தாம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இந்த முடிவை தாம் மேற்கொண்டதாக பைசல் காசிம் அறிவித்தார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!