பிரதேச சபை உறுப்பினர்கள் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்! April 22, 2022 6:36 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபையின் 48வது அமர்வு நேற்றுக் காலை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது சபையின் 25 உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சபை உறுப்பினர்கள் சபையில் கருப்பு பட்டி அணிந்து அரசுக்கு எதிராக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது சபை அமர்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக அரசுக்கு எதிராக மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரத்தவெறி பிடித்தவனே நாட்டை விட்டு வெளியேறு, மக்களை பட்டினிச்சாவில் தள்ளாதே, மக்களை கொன்று அரசியல் செய்யாதே, விவசாயத்தில் கை வைத்து நாட்டை அழிக்காதே,சொந்த மக்களைச் சுட்டுத் தள்ளாதே உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மை குறிப்பிடத்தக்கது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…