பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம்? April 23, 2022 10:14 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள இடைக்கால அரசு பிரேரணை நிராகரிக்கப்பட்டால், இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 10 பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது இடைக்கால அரசாங்க முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் மொத்த எண்ணிக்கை 20ஐ நெருங்குகிறது.தற்போது, அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் அதிகபட்சமாக 116 உறுப்பினர்கள் உள்ளனர், எனினும் 20 பேர் சுயேட்சையாக மாறும் நிலையில் அரசாங்கம் 100 ஆசனங்களுக்குள் வீழ்ச்சியடைவதுடன், அதன் பெரும்பான்மையை இழக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…