ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சுரேஷ் சாலே!

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார பரபரப்பு தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
    
மேலும் பல புலனாய்வு அதிகாரிகளும் இதில் ஈடுபட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொய்யான அறிக்கைகளை வெளியிடக் கூடாது எனவும், தகவல் தெரிந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!