காஷ்மீர் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை!

கடந்த 22ம் தேதி காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் ஊடுருவிய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த இரு தற்கொலைப்படை தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

சட்டவிரோத சுரங்கப்பாதைகள் மூலம் அவர்கள் ஊடுருவி இருக்க கூடும் என கணித்த அதிகாரிகள் எல்லையில் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.
    
இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சோதனையில், சம்பாவில் சிறிய அளவில் நிலத்தடியில் இருந்த பள்ளம் ஒன்று சுரங்கப்பாதையாக சென்றது கண்டறியப்பட்டது.

இந்திய எல்லையில் இருந்து 900 மீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் எல்லை கோட்டில் இருந்து 150 மீட்டர் இடைவெளியிலும் சுரங்கப்பாதை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!