மீண்டும் பிரதமர் பதவி விலகல் கூத்து!

பிரதமர் பதவியிலிருந்து தன்னை விலகுமாறு ஜனாதிபதி கோரவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் அளித்துள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்
    
அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்றும் ரொஹான் வெலிவிட்ட சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்வாறான எந்தக் கோரிக்கையும் ஜனாதிபதியால் விடுக்கப்படவில்லை என்றும், இராஜினாமா கடிதத்தில் பிரதமர் கையொப்பம் இடவில்லை என்றும் பிரதமர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!