தற்போதைய பெற்றோல் கையிருப்பு குறித்து எரிசக்தி அமைச்சரின் விசேட கருத்து

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின்  செயற்பாடுகள் மீள இயங்கும் வரை மட்டுப்படுத்தப்பட்டளவில் டீசல் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளாந்தம் சராசரியாக  4 ஆயிரம் மெட்ரிக் டொன்  ஒட்டோ டீசல் மற்றும் 2 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன்   92  ரக பெட்ரோல் தினசரி வெளியிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 நாட்டின் எரிபொருள் இருப்பு தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர   டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை  சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் மசகு  எண்ணெய்  எதிர்வரும் 9 ஆம் திகதி  தரையிறக்கப்படவுள்ளதாகவும்  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர   டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!