பிரதமரின் பதவி விலகலை உறுதிப்படுத்துகிறதா நாமலின் காணொளி?

பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச இன்று விலகுவார் என செய்திகள் வெளியாகும் நிலையில், நாமல் ராஜபக்ச ருவிட்டரில் இட்டிருக்கும் பதிவு அதனை சூசகமாக உறுதி செய்வதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
    
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஆற்றிய உரை ஒன்றின் காணொளி வடிவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இந்தப் பிரதமர் பதவி எனக்குப் பெரிய விடயமல்ல! மஹிந்த ஜனாதிபதியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் அல்லது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் நான் மஹிந்த ராஜபக்ஷ தான்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆக்ரோசமாக கூறும் காணொளி பகுதி அதில் உள்ளது.

இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையினை ஆற்றிவிட்டு பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலக உள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!