ஆறாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்றார் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ள நிலையில் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

தேசிய இடைக்கால அரசாங்கமாக புதிய அமைச்சரவை செயற்படவுள்ளதுடன் புதிய அமைச்சரைவயில் உறுப்பினர்கள் 15 பேர் அடங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்ற ஒற்றை தேசியப்பட்டியல் ஆசனத்தின் ஊடாக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார். இன்று அவர் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் இதற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்.
அவர் 1993 முதல் 1994 வரை, 2001 முதல் 2004 வரை, 2015 முதல் 2015 (100 நாட்கள்), 2015 முதல் 2018, மற்றும் 2018 முதல் 2019 வரை இலங்கையின் பிரதமராக பணியாற்றினார்.

ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருப்பதுடன், 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதல் 2015 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவருக்குப் பதிலாக விக்ரமசிங்க தற்போது பிரதமராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!