மகளுக்காக ஆணாக மாறிய பாசத்தாய்! May 16, 2022 6:41 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளை பாதுகாப்பாக வளர்க்க ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருக்கிறார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (57), ஆணாதிக்கச் சமூகத்தில் தனது மகளை பாதுகாப்பாக வளர்க்கவே இந்த வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார். பேச்சியம்மாளுக்கு 20 வயதில் திருமணம் ஆனது, அனால் அடுத்த 15 நாட்களில் அவரது கணவர் சிவா இறந்துவிட்டார். அடுத்த சில மாதங்களுக்கு அவரது வாழ்க்கை மிகவு கடினமாக இருந்துள்ளது. ஏனெனில் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். பின்னர் அவர் தனது மக்கள் சண்முகசுந்தரியைப் பெற்றெடுத்தார்.பேச்சியம்மாளுக்கு தனியாக ஒரு குழந்தையை வளர்க்க மிகவும் கடினமாக இருந்தது, அவர் தனது மகளுக்காக கட்டுமான தளங்கள், ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் வேலை செய்தார். மேலும், இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் முடிவு செய்தார்.ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த பணியிடங்கள் அனைத்திலும் அவள் துன்புறுத்தலுக்கு ஆளானாள். ஒரு நாள், பல மாதங்கள் பாலியல் அவதூறுகளையும், கஷ்டங்களையும் சந்தித்த பிறகு, பேச்சியம்மாள் ஆணாக மாற முடிவு செய்தார்.சட்டை, லுங்கி என தன் உடையை மாற்றி முத்து என்று பெயர் சூட்டிக்கொண்டாள். அதிலிருந்து 36 வருடங்கள் ஆண் வேடமிட்டு வாழ்ந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு காட்டுநாயக்கன்பட்டியில் தனது மக்களுடன் குடியேறினார். வீட்டில் இருக்கும் எனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் மகளுக்கு மட்டுமே அவர் ஒரு பெண் என்று தெரியும்.மக்கள் சண்முகசுந்தரிக்கு இப்போது திருமணமாகி குடும்பம் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கிறது. ஆனால் பேச்சியம்மாள் தன் உடையையோ அடையாளத்தையோ மாற்றிக்கொள்ள இன்னும் தயாராகவில்லை.அடையாள மாற்றம் தனது மகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்ததாகவும், அவள் என்றென்றும் ‘முத்து’வாகவே இருக்க முடிவெடுத்து வாழ்ந்து வருகிறார்.பேச்சியம்மாள் சமீபத்தில் ஒரு பெண் அடையாளத்தில் MGNREGS வேலை அட்டையைப் பெற்றார். ஆனால் அவருடைய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின்படி, அவர் இன்னும் ஆணாகவே இருக்கிறார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…