எரிசக்தி அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்த கோரிக்கை

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம்  அறிவுறுத்தியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  டுவிட்டர் பதிவின்  ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை  டீசல் கொள்கலன் கப்பல் ஒன்று   நேற்று நாட்டை  வந்தடைந்துள்ள நிலையில்  இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் மூன்று கப்பல்கள் எதிர்வரும்  இரண்டு வாரங்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!