மஹிந்தவை கைது செய்ய வலியுறுத்தி அலரி மாளிகை நோக்கி பேரணி! May 16, 2022 7:39 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்கள் குறித்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரைக் கைது செய்ய வலியுறுத்தப்பட்டமைக்கு மேலதிகமாக, மே 9 வன்முறைகளுடன் தொடர்பு என்ற பெயரில் அமைதி ஆர்ப்பாட்டத்துக்கு பங்களுப்பு நல்கியவர்களை பொலிசார் வேட்டையாடுவதை நிறுத்த வேண்டும் எனவும் இவ்வார்ப்பாட்டப் பேரணி ஊடாக வலியுறுத்தப்பட்டது.காலி முகத்திடலை அண்மித்த கோட்டா கோ கமவிலிருந்து ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் அலரி மாளிகை நோக்கி சென்றது. முகந்திரம் வீதியூடாக பெரஹர மாவத்தையை ஊடறுத்து அலரி மாளிகை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டத்தை, அலரி மாளிகைக்கு முன்பாக வீதித் தடைகளை போட்டு பொலிசார் மறித்தனர்.இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியதுடன் பதற்ற நிலை ஒன்றும் ஏற்பட்டது.இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் மீண்டும் தமது கோஷங்களுடன் காலி முகத்திடலை அண்மித்த கோட்டா கோ கமவை வந்தடைந்தனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…