பொருளாதார நெருக்கடிக்கு ஒரு ட்ரிலியன் ரூபாவினை அச்சிடுவதே தீர்வு – ரணில்

பொருளாதார நெருக்கடிக்கு தற்காலிக தீர்வொன்றினை முன்வைக்க மேலும் ஒரு ட்ரிலியன் ரூபாவினை அச்சிடுவதற்கு நேர்ந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ரூபாயிலும் இலங்கை அரசாங்கத்திற்கான வருமானம் கிடைக்கப்பெறாமையே இதற்கு காரணம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!