369 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு! – வரி அதிகரிப்பு.

369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் தளர்த்துவற்கு தீர்மானித்துள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ள நிலையில், பல உற்பத்திகளுக்கு 100% கட்டண விகிதத்தையும் நேற்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
    
இறக்குமதி செய்யப்படும் குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள நிதியமைச்சு அவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த வரிகளுக்கே மீண்டும் 100% வரி விதித்துள்ளது.

உதாரணமாக, இறக்குமதி செய்யப்படும் சீஸ் மீது விதிக்கப்படும் மேலதிக கட்டணம் 100% ஆக அதிகரிக்கும். அதாவது1000 ரூபாயாக இருந்த இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீஸின் வரி இப்போது ரூ. 2000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யோகட் உட்பட பால் உற்பத்திப் பொருட்களுக்கும் மேற்குறிப்பிட்ட வரியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோக்களின் டயர்களது விலைகள் 50% உயர்த்தப்பட்டுள்ளன. வளிபதனாக்கி, சலவை இயந்திரம், ரைஸ் குக்கர், மைக்ரோவேவ், குளிர்சாதனப் பெட்டி, அலைபேசிகளின் விலைகள் 100% உயர்ந்துள்ளதுடன், ஏனைய மின்சாதனங்கள் 15% உயர்ந்துள்ளன.

அப்பிள் மற்றும் திராட்சை பழங்கள் மீதான இறக்குமதி வரி ஒரு கிலோகிராமுக்கு 300 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சொக்லேட் மற்றும் கோகோ கொண்ட பிற உணவு தயாரிப்புகளுக்கு 200% மேலதிக வரியை நிதி அமைச்சு விதித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!