மின் கட்டணங்களை குறைக்க மின்சார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் – வலுசக்தி அமைச்சர்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்காத நிலையில், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்த முன்மொழிவும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படாது என மின்சக்தி  மற்றும் வலுசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர்  காஞ்சன விஜேசேகர  இந்த விடயத்தை தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை அதிகரித்து  சம்பளம் வழங்குவதற்கு பதிலாக,  புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு ஆதரவளிக்கு வகையில், மின் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!