சுயாதீன அணியில் சம்பிக்க?

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
    
நாரஹேன்பிட்டியில் உள்ள 43ஆவது பிரிவு அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சபையில் தான் சுயாதீனமாக இருந்தாலும், அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள பாட்டலி எம்.பி, சுயாதீனமாக இருந்து கொண்டே எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்கான யோசனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!