இலஞ்ச ஊழல் ஆணைக்குழு – குமார வெல்கம விடுவிக்கப்பட்டார் ..!

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கைப் போக்குவரத்து சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இலங்கைப் போக்குவரத்து சபையில் இல்லாததொரு பதவியை உருவாக்கி சம்பளம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!