கொழும்பில் மேலதிகமாக 5 ஆயிரம் இராணுவம், 3ஆயிரம் பொலிசார் குவிப்பு!

எதிர்வரும் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
   
தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு மேலதிகமாக இந்த 8 ஆயிரம் பேரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போதும் படிப்படியாக கொழும்பு நோக்கி வருகை தருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்தன.

3 ஆயிரம் பொலிஸாரும். 5 ஆயிரம் இராணுவத்தினரும் இவ்வாறு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பு பணிகளுக்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!