பங்கீட்டு அட்டைக்கே இனி எரிபொருள்! July 13, 2022 7:20 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக தேவையான எரிபொருளினைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையினை தடையின்றி வழங்குவதற்கும் பொதுமக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் கிடைக்கப்பெறும் குறைந்தளவிலான எரிபொருளினை பங்கீட்டு முறையிலேயே வழங்கவேண்டியுள்ளது.இது தொடர்பில் எரிபொருள் விநியோக அட்டை முறைமை ஒன்று ஏற்கனவே மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகிக்கப்பட இருப்பதனால் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இவ் அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.இவ்விடயம் தொடர்பில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.# பொதுமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தங்களுக்கான எரிபொருள் விநியோக அட்டையினை (வெள்ளை நிறம்) தாங்கள் வதியும் கிராம உத்தியோகத்தரிடமும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தமது திணைக்களத் தலைவரினூடாகவும் (சுகாதார சேவை – பிங் நிறம், ஏனையோர் நீல நிறம்) விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள முடியும்.# வாகனம் ஒன்றுக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை எனும் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.# வாகன உரிமை தொடர்பில் அது குடும்ப உறுப்பினர்களிடையே (கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் திருமணமாகாத பிள்ளைகள்) காணப்படின் குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் எரிபொருள் விநியோக அட்டைக்காக பதிவினை மேற்கொள்ள முடியும்.# வாகன உரிமை குடும்ப உறுப்பினர் அல்லத எவரேனும் பெயரில் காணப்படின் முறையான ஆவணங்களை பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து பதிவினை மேற்கொள்ள முடியும்.# நபர் ஒருவர் வாகனம் ஒன்றிக்கான எரிபொருள் விநியோக அட்டை பதிவினையே தனது பெயரில் மேற்கொள்ள முடியும். எனினும் வணிகம் அல்லது வாழ்வாதார நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இந்நிபந்தனை பொருந்தாது.# தங்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தாங்களே தெரிவு செய்து கொள்ள முடியும். எனினும் ஏதேனும் நிலைமைகளில் எரிபொருள் கிடைக்கப்பெறும் நிலையங்களின் அடிப்படையில் தற்காலிகமாக வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான அறிவுறுத்தல் உரிய தரப்பினால் தங்களுக்கு வழங்கப்படும்.# மேற்படி அட்டைகளை பெற்றுக்கொள்வதில் ஏதேனும் இடர்பாடுகள் காணப்படுமாயின் உடனடியாக பிரதேச செயலகங்களை நாடுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு அனைவரும் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…