ரணிலை கோட்டாபய பதவியிலிருந்து நீக்க வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மக்களின் கோரிக்கைக்கு மாறாக ஜனாதிபதியாக வருவதற்கு சாமர்த்தியமாக முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி, நாட்டை மேலும் அமைதியின்மைக்கு ஆளாக்காமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கும் முன்னர், ரணில் தமது பதவியை துறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மதத் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் பதவிகளில் இருந்து விலகுமாறு கோருவதுடன், பிரதமர் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிப்பது நாட்டில் அமைதியின்மையை மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றால் போராட்டங்கள் வெடிக்கும்! ஜேவிபியின் தலைவர் எச்சரிக்கை 

ரணிலின் பதவி விலகல்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிக்கும் முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கூறிய அவர், அவ்வாறு செய்யவில்லை என்றால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

நாட்டில் மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தாமல் பதவி விலகுமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் வலியுறுத்துகிறோம். கடந்த சில மாதங்களாக எமக்கு போதுமான குழப்பங்களும் அமைதியின்மையும் ஏற்பட்டிருந்தன.

மக்களின் கோரிக்கை
நாட்டில் தற்போது சகல துறைகளும் முடங்கியுள்ளன. அதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பு உள்ளது. எனவே மக்களின் கோரிக்கைக்கு பிரதமர் செவிசாய்த்து இனி எந்த நெருக்கடியையும் தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
]
மேலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட பிரதமர் விக்ரமசிங்க சதி செய்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!