பாசிசவாதியாக செயற்படும் ரணில்:ஐ.மக்கள் சக்தி

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதி எனக்கூறிக்கொண்டு நாட்டில் அவசர காலச்சட்டத்தையும் ஊரடங்குச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி மக்களை அடக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்காக ஐ.மக்கள் சக்தி குரல் கொடுக்கும்

நிராயுத போராட்டகாரர்களை அடக்க ஆயுதங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு படையினரை அழைத்த விதத்தை ஐக்கிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சிறந்த மறுசீரமைப்புக்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்.

பாசிசவாதமாக செயற்படும் ரணில்
எதிர்க்கட்சி சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையில், அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பிரதமர் பாசிசவாதமாக மக்களை அடக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மக்களின் பிரச்சினைகளுக்கு துப்பாக்கி, கண்ணீர் புகை குண்டுகளில் மூலம் பதிலளிக்கக் கூடாது. மக்கள் போராட்டத்திற்கு செவிக்கொடுத்து ஜனநாயக ரீதியாக பிரச்சினை தீர்க்குமாறு பிரதமரை வலியுறுத்துகிறோம் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!