புதிய ஜனாதிபதி நியமத்திற்கான வேட்பு மனு- 19ம் திகதி முன்னெடுப்பு

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை  எதிர்வரும் 19ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

 சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி  புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!