கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்! July 16, 2022 7:52 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரோனா தொற்று உறுதியானதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வருகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சில நாட்களாக சளி பிரச்சினைஇருந்து வந்துள்ளது. இதனால், நேற்றுகாலை கரோனா பரிசோதனை செய்துகொண்டார். மாலையில் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனைக்கு சென்றார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனைசெய்தனர். பின்னர், மருத்துவர்களின்ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளார். மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுபற்றி அவரது ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆதரவாளர்கள் யாரும் நேரில் வரவேண்டாம். செல்போனில் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்’ என்று தெரிவித்தனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…