தமிழகத்தை உலுக்கிய கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 144 தடை உத்தரவு பிறப்பிப்பு! July 18, 2022 7:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி மாணவியின் மரணத்தினால் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் நயினார்பாளையத்தில் தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மாணவியின் குடும்பத்தார் மற்றும் பலர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் பல பள்ளி பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர்.பொலிசார் பலரும் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நயினார்பாளையத்தில் 31ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், பள்ளியில் நடந்த போராட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…