போட்டியில் இருந்து பின்வாங்கமாட்டேன்! July 18, 2022 8:04 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி வேட்புமனு தாக்கலில் இருந்து இறுதி நேரத்தில் விலகப் போவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவிவரும் செய்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க கருத்து வௌியிட்டுள்ளார். எதிர்கால அதிகார திட்டங்களுடன் தொடர்பில்லாத இருவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தெரிவு செய்தால் உருவாக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தின் அதிகாரங்களை கூட பொறுப்பேற்க தயாராக இருப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார்.“எதிர்கால அதிகார திட்டங்களுடன் தொடர்பில்லாத இருவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்தால், வரும் அனைத்து கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது மட்டுமின்றி, அனைத்து கட்சி அரசில் பொறுப்புக்களை ஏற்கவும் தயாராக உள்ளோம். அப்படியானால் வேட்புமனுவை வாபஸ் பெற தயாராக உள்ளோம். இது புதன்கிழமை வரை செல்லுபடியாகும். ஆனால் அந்த முன்மொழிவு நிறைவேற்றப்படாவிட்டால் நான் போட்டியிடுவேன். திரும்பப் பெறப்பட மாட்டாது” என்றார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…