பாடசாலை கல்வி செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்த தீர்மானம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் திங்கட்கிழமை , செவ்வாய் கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் வழமையாக பாடசாலை நேரத்தில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏனைய இரண்டு நாட்கள் இணைய வழி கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி திறக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!