வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்

இலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39 இராணுவ முகாம்களை நீக்க நடவடிக்கை எடுக்கபடுகின்றது

வடக்கு கிழக்கில் மொத்தமாக 100 இராணுவ முகாம்களை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றது.

இராணுவத்தில் இருக்கும் 25 வீத படையணியினரை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நடவடிகைகள் மூலமாக இராணுவத்தை பலவீனபடுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனை அரசியல் காரணியாக கருதக்கூடாது. இராணுவத்தின் உள்ளேயே பலவீனமாதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். ஆகவே உரிய அமைச்சர்கள் உடனடியாக இந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!