ஜோசப் ஸ்டாலின் கைது ஆழ்ந்த கவலையளிப்பதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி Mary Lawlor தெரிவிப்பு August 4, 2022 2:21 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி Mary Lawlor இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வௌியிட்டுள்ளார்.தனது ட்விட்டர் தளத்தில் அவர் இது குறித்து பதிவிட்டுள்ளார்.மனித உரிமைகளுக்காக வாதிடுவோரை தண்டிக்காமல், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கை அரசாங்கம் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…