இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக எடுக்கப்படும் நடவடிக்கை! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு சலுகை வழங்குவதற்காக நடவடிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இது தொடர்பில் நாடாளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் கட்டண அதிகரிப்பு! மின் அலகுகளுக்கான கட்டணம் தொடர்பில் தெளிவான விபரம் 

சலுகைகளை வழங்க அரசாங்கம் கவனம்

தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!