
சீனா தைவான் ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்கனவே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க சட்டமியற்றுவர்களின் தைபே பயணம் சீனாவை கடுமையான கோபத்திற்குள் தள்ளியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சீனாவின் இராணுவ பிரிவு திங்களன்று தைவானைச் சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் பல சேவை கூட்டு போர் தயார்நிலை ரோந்து மற்றும் போர் பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.
இதுத் தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் பயணம் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அமெரிக்காவின் உண்மையான முகத்தை முழுமையாக அம்பலப்படுத்துவதாகவும் தெரிவித்தது.
ஆனால் அறிக்கையில் பயிற்சியின் விவரங்கள் வழங்கவில்லை.
தைவான் பிரதமர் சு செங்-சாங், வெளிநாட்டு நண்பர்களின் இத்தகைய வருகையை சீனாவின் அச்சுறுத்தல்களால் தடுக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!