ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சுகாதார அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக ஜிஎல் குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
  
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்யப்பட்ட 600 குழாய்களால் 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!