மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு!

வட மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு இடைக்கால தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், நேற்று இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வட மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த நீதியரசரொருவர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவில் இருந்துள்ளதால் அவர் முன்பாக வழக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!