கோட்டாபய மனைவியுடன் புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே புத்திசாலித்தனமான வேலையாகும்: குமார வெல்கம

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை அரசியலில் பிரவேசிக்க கூடாது என நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம எச்சரித்துள்ளார். அவர் மீண்டும் பிரதமராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவோ வருவார் என்று சிலர் கூறுகின்றனர்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச, வீட்டில் தங்கி மனைவியுடன் புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே, செய்ய வேண்டியது புத்திசாலித்தனமான வேலையாகும் என்று வெல்கம கூறியுள்ளார்.
6.9 மில்லியன் மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக பதவியேற்ற போது, கோட்டாபய ராஜபக்சவின் சொந்த முகாமில் உள்ள பலர் மகிழ்ச்சியடையவில்லை என தாம் ஏற்கனவே எச்சரித்ததாக குமார வெல்கம சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!