வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக புதிய வசதி அறிமுகம் September 20, 2022 9:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest புலம்பெயர்ந்த மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வகையில், லிட்ரோ எரிவாயு நிறுவனம் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.வெளிநாட்டில் இருந்து இலங்கையிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு எரிவாயுவை பெற்றுக்கொடுக்க விண்ணப்பம் செய்வதற்காக இந்த செயலியை (Home Delivery App) லிட்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.அமெரிக்க டொலர்அதற்கமைய வெளிநாட்டில் இருந்து லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவை அமெரிக்க டொலர்களில் ஓடர் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த செயலியை கூகுள் பிளே மற்றும் app ஸ்டோரிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.புதிய செயலிலிட்ரோ சமையல் எரிவாயு உள்நாட்டு சந்தையில் 80 சதவீத பங்குகளுடன் முன்னணியில் இருப்பதால், மேம்படுத்தப்பட்ட புதிய அம்சமாக இது நுகர்வோருக்கு அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.புதிய செயலி தொடர்பான கூடுதல் விவரங்களை 1311 தொலைபேசி இலக்கத்தின் ஊடாக லிட்ரோ வாடிக்கையாளர் பராமரிப்பு மையத்தில் பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…