படிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்

இந்தியா – தாம்பரத்தில் மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண்ணை இரு பொலிஸார் படிக்கட்டு போல குனிந்து நின்று கீழே இறங்க உதவி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே பாதி வழியில் நின்றது. இதனையடுத்து பெரும்பாலான பயணிகள் இறங்கிய நிலையில், படிகள் உயரமாக இருந்ததால், கர்ப்பிணி பெண் அமுதா, கீழே இறங்க முடியாமல் 2 மணி நேரமாக தவித்தார்.

இதையடுத்து, தமிழக பொலிஸார் ரயிலின் நுழைவு வாயிலில் இரு படிக்கட்டு போல குனிந்து நின்றனர்.

குறித்த கர்ப்பிணி பெண் அவர்களின் முதுகின் மீது கால் வைத்து கீழே இறங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!