மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம்!

புதிய அமைச்சர்கள் பதவியேற்ற பின்னரே 25 மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்கள் நியமனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“அமைச்சர்கள் சிலர் விரைவில் பதவியேற்கவுள்ளனர். புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதன் பின்னர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!