இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்: தேர்தல் ஆணைக்குழு

இரட்டைக் குடியுரிமையுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தீர்ப்பின் பிரகாரமன்றி வேறும் வழிகளில் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் கருத்துக்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

22ஆம் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என்றும், ஒருவர் இரட்டைக் குடியுரிமை கொண்டவரா என்பது குறித்து உடன் கருத்து வெளியிட முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தான் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தால் பதவி விலகுவதே அவர் செய்ய வேண்டியதாகும். தேர்தல் காலத்தில் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை குறித்து ஆராயப்படுகின்றது.

எனினும் ஏதாவது ஓர் தரப்பினர் இரட்டைக் குடியுரிமை பற்றி குறிப்பிட்டால் மட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் தாங்களாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!