தோழியின் மீதான அளவு கடந்த காதலால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! November 10, 2022 10:47 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழக மாவட்டம் தர்மபுரியில் தோழியை பிரித்ததால் மனமுடைந்த பெண் பொறியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானதாக அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்த பொலிஸார், கோவையில் அவரை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, இரண்டாம் ஆண்டு படிக்கும்போது 3ஆம் ஆண்டு மாணவியுடன் நட்பு ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது தன்பாலின காதலாக மாறியதாகவும் கூறினார்.இருவரும் நெருங்கி பழகிய நிலையில், இந்த விவகாரம் குறித்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் சந்தித்துக் கொள்ள கூடாது என்று பெற்றோர் கண்டித்துள்ளனர்.இந்த நிலையில், பொறியாளரான தோழியின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் அந்த மாணவி. கோவையில் இருவரும் தனியாக வீடு எடுத்து 10 நாட்களாக தங்கி இருந்துள்ளனர்.விசாரணைக்கு பின்னர் இருவரும் தர்மபுரி மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அங்கு இருவருக்கும் அறிவுரை வழங்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது பெண் பொறியாளர் கழிவறைக்கு செல்வதாக கூறி தனது கழுத்து, கைகளில் பிளேடால் அறுத்துக் கொண்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.கல்லூரி மாணவியை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…