சிந்தித்து செயற்படவில்லை என்றால் அனைவரும் அடிவாங்க நேரிடும்-வஜிர அபேவர்தன November 18, 2022 9:25 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் நிலவும் நிலைமையில் இருந்து மீள்வதற்காக நாடாளுமன்றம் சிந்தித்து செயற்படவில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் சிறிய வாகனங்களில் பயணம் செய்ய நேரிடும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.அரசியலை பகிர்ந்துக்கொண்டு தீர்வுகாண முயற்சிப்போம்பொருளாதாரத்தை பகிர்ந்து கொள்ளாமல், அரசியலை பகிர்ந்துக்கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்போம். பிரச்சினையில் இருந்து நழுவி சென்றால், அனைவரும் அடிவாங்க நேரிடும். தேசிய பொருளாதார கொள்கைக்கு இணங்கி திட்டினாலும் பரவாயில்லை எனவும் வஜிர அபேவர்தன கூறினார்.மொட்டுக்கட்சியினர் கேட்பதற்கு மிகவும் அழகான கதைஅதேவேளை வஜிர அபேவர்தனவின் கதையை மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்பதற்கு மிகவும் அழகான கதை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.வஜிர அபேவர்தன வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது இடையில் எழுந்து தயாசிறி ஜயசேகர இதனை கூறினார்.“மொட்டுக்கட்சியினர் சுற்றிவளைத்து இருக்கும் அழகை பாருங்களேன்” என தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன, “ நீங்களும் மொட்டுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்தானே, நீங்களும் வாருங்கள். அப்போது மேலும் அழகாக இருக்கும்” எனக்கூறினார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…