வரவு செலவுத்திட்டம் அரசாங்கத்துக்கு வெற்றி, மக்களுக்குத் தோல்வி! திஸ்ஸ அத்தநாயக்க

அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றியடைந்துள்ள போதிலும் பொதுமக்கள் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கான எந்த முன்மொழிவும் அற்ற வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் தீவிரமடையும்.

அதுதணிவதற்கான வாய்ப்புகள் இல்லை இதனைத்தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாகவும், முடிந்த மட்டிலும் முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனால் அரசாங்கம் அதனை நிறைவேற்றிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளது.
இருந்தும் இந்த வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டதன் ஊடாக பொதுமக்கள் தோல்வியுற்றுள்ளனர் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!