ரணிலின் உருவப்பொம்மையுடன் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உருவப்பொம்மையொன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அத்துடன் அந்த பொம்மைக்கு பணம் வழங்கப்படுவது போன்ற பாவனையையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!