இரண்டு மாதங்களுக்குள் நேர்மையைக் காட்டுங்கள்!

பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக தீர்வு தருவதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார் என்று சர்வகட்சிக் கூட்டத்தின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
    
அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றது. ஆகவே புதிய விடயங்களை இப்பொழுது பேச முடியாது. இதற்கு ஒரே முடிவு 13ஆவது திருத்தம் தான். அது முழுமையான தீர்வு அல்ல. ஆனாலும், அதில் இருந்து ஆரம்பிப்போம். அதிலிருந்து ஆரம்பித்து உங்களுடைய நேர்மையை காட்டுங்கள் என்று கூறி இருக்கிறேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!