மேலும் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது சதொச December 20, 2022 3:31 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. மக்களின் வறுமையை போக்குவதற்கான தேசிய வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த புதிய விலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 185 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 378 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு டின் மீன் (425 கிராம்) ஒன்றின் விலை 480 ரூபாவாகவும், மிளகாய்த்தூள் கிலோகிராமொன்றின் விலை 1780 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 1100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…