கபடிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு!

2023 சர்வதேச தினை ஆண்டாக அறிவிக்கப்பட்டதால் எம்பிக்கள் மக்களிடையே பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். டெல்லியில் இன்று நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசுகையில், அடுத்த 2023ஆம் ஆண்டை ஐநா சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. அதனால், எம்பிக்கள் கூட்டத்தில் பேசும்போது, தினை பற்றி பிரச்சாரம் செய்யுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
    
தினை பொருட்களை பிரச்சாரம் செய்தவன் மூலம் விவசாயிகள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார். மேலும், கபடி போன்ற உள்ளூர் போட்டிகளை ஊக்குவித்து அதிக போட்டிகளின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் மோடி அந்த கூட்டத்தில் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!