போதைப்பொருளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்!

பஞ்சாப் மாநிலத்தின் எல்லையோர பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோன் ஒன்று 20 மீட்டர் தூரத்தில் பறந்தது. எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். அது பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. அதை பாகிஸ்தான் வீரா்கள் எடுத்துச்சென்றனர்.
    
இதேபோல் மற்றொரு சம்பவத்தில் அதே எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாசில்கா மாவட்டத்தின் விவசாய இடத்தில் 25 கிலோ போதைப்பொருட்களை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். இந்த சம்பவத்தையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்திய துருப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!